Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'வெள்ளையனே வெளியேறு' போல் 'மோடியே வெளியேறு' போராட்டம்: மம்தா பானர்ஜி

'வெள்ளையனே வெளியேறு' போல் 'மோடியே வெளியேறு' போராட்டம்: மம்தா பானர்ஜி
, வியாழன், 9 மே 2019 (08:47 IST)
ஆங்கிலேயர்களை நாட்டில் இருந்து விரட்ட மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தியது போல். கோட்சே ஆதரவாளரான மோடியை நாட்டில் இருந்து வெளியேற்ற நாங்கள் 'மோடியே வெளியேறு' போராட்டம் நடத்தி வருகிறோம் என தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
 
மோடி தன்னை டீக்கடை வியாபாரி என்று கூறிவருவது பச்சை பொய் என்றும், நாட்டிற்கு பொய் சொல்லும் காவலாளி தேவையில்லை என்றும் கூறிய மம்தா, நம் நாட்டிற்கு மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் தான் தேவையென்றும், காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர் தேவையில்லை என்றும், அவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு என்றும் மம்தா மேலும் பேசினார்
 
webdunia
மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் ஆதிவாசிகள் தாக்கபப்டுவதாகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும், ஜனநாயகத்திற்கே ஆபத்தை உண்டாக்கும் இந்த ஆட்சியை தூக்கி எரிய வேண்டும் என்றும் மம்தா ஆவேசமாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 32 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்: அமைச்சரின் பேச்சால் பரபரப்பு