Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி எனக்கு, கட்சி உங்களுக்கு! சசிகலாவுக்கு தூதுவிட்டாரா ஈபிஎஸ்?

Webdunia
வியாழன், 9 மே 2019 (22:08 IST)
ஆட்சியை காப்பாற்ற பலவித முயற்சிகள் செய்து வரும் அதிமுக தலைமை கடைசியாக சசிகலாவிடமே சரண் அடைவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆட்சிக்கு நீடிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை என்றால் அமமுகவின் ஆதரவை பெற்று ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், அதற்கு பதிலாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவுக்கு வழங்கவும் தயார் என்று ஒரு உயரதிகாரி மூலம் ஈபிஎஸ் தூது விட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
 
ஆனால் இந்த சமாதானத்திற்கு சசிகலா எந்தவித ரியாக்சனும் காண்பிக்கவில்லையாம். இப்போதைக்கு தினகரன் ஆலோசனையின்பேரில் நடக்கவே அவர் விரும்புகிறாராம். எனவே ஈபிஎஸ் சமாதான முயற்சி பலனளிக்காது என்றே நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்தால் மீண்டும் ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments