Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் பேச்சில் விதி மீறல் இல்லை - தேர்தல் ஆணையம்

Webdunia
சனி, 4 மே 2019 (13:36 IST)
மஹாராஸ்டிரா மாநிலம் நந்தேவாட் என்ற இடத்தில் கடந்த மாதம் 6 ஆம்தேதி பிரதமர் நரேந்தர மோடி பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதத்தில் ’நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதிதான் வயநாடு’ என்று தொகுதியைக் குறிப்பிட்டு பேசினார். 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் அது நட்சத்திர தொகுதியானது. இந்நிலையில் பிரதமர் மோடி  தொகுதியை  குறிப்பிட்டு பேசியதாகக்கூறி  தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.
 
இந்தப் புகாரை  விசாரித்த தேர்தல் ஆணையம்  பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்று தெரிவித்துள்ளது.தற்போது பிரதமர் மோடியின் மீதான 4 வது விதிமீறல் புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments