Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை ஜாமீனில் வெளியே வந்து கொன்ற சகோதரர்கள்

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (14:06 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள கவுஷாம்பி  மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள   கவுஷாம்பி  மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு சிறுமியை, பவான் நிஷாத் என்ற குற்றாவாளி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது 19 வயதாகும், அந்தச் அப்பெண்ணிடம் வழக்கைத் திரும்ப பெற  வேண்டுமென பவான் நிஷாத் மிரட்டியதாகவும், இதற்கு அப்பெண் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த பவான் நிஷாத் தனது சகோதரர் உடன் இணைந்து அப்பெண்ணை கோடாரியால்  வெட்டிக் கொன்றுள்ளார்.

பவானின் சகோதரர் அஷோக் வேறொரு கொலை வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர்  ஆவார். தற்போது இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்