Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்.. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

amar prasath reddy
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:45 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடி அகற்றப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமர் பிரசாத்ரெட்டி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு ஏற்கனவே நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஜாமீன் மனு  தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும்   கொடி கம்பத்தை அகற்றி வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் 55 அடி உயர கொடிக்கம்பம் காக்கா குருவிகள் அமரவே பயன்படும் என்றும் கருத்து தெரிவித்தார். 
 
மீண்டும் அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அமர்பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.எல்.ஏக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய முதல்வர்