Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளையும் விவசாயிகளையும் கை தூக்கி விடும் பட்ஜெட்..! பிரதமர் மோடி பாராட்டு.!.

Senthil Velan
வியாழன், 1 பிப்ரவரி 2024 (13:49 IST)
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்களுக்கான பட்ஜெட் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஏழைகளையும் விவசாயிகளையும் கை தூக்கி விடும் பட்ஜெட் இது என்றார். 
 
வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டின் பலன்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி, மத்திய இடைக்கால பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது என்றும் கூறினார்.
 
எதிர்கால இந்தியா என்ற தாரக மந்திரத்திற்கு வழி சேர்க்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் புதிய தொழில் தொடங்குவதற்கான பொன்னான வாய்ப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ALSO READ: இலவச கல்வி என கூறிவிட்டு வசூல் வேட்டை நடத்துவதா? குழந்தைகளுடன் பெற்றோர்கள் புகார்..!!
 
அங்கன்வாடி ஊழியர்களுக்கு காப்பீடுகள் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பை  வழங்கி உள்ளது என்று அவர் கூறினார். மேலும்,  சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம் ஒரு கோடி வீடுகள், இலவச மின்சார சேவை பெற முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்களுக்கானது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை வைஜெயந்திமாலாவுக்கு என்ன ஆச்சு? மருமகள் கொடுத்த விளக்கம்..!

திருமணம் செய்யுங்கள்.. இல்லையேல் வேலையில் இருந்து நீக்கப்படுவீர்கள்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சம்மன்: அமலாக்கத்துறை அதிரடி..!

முதல்வர் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

கோமாவில் இருந்த நபர் திடீரென எழுந்து நடந்ததால் டாக்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments