Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Siva
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (07:59 IST)
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கூடிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் உருவான தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது என கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. 
 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மறு ஆய்வு மனுக்களை ஆய்வு செய்தபோது, தீர்ப்பு பதிவுகளில் பிழை இருந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றும், எனவே இந்த மனுக்கள் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், நீதிபதிகள் தீர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெரினாவில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி.. எத்தனை மணிக்கு?

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

அடுத்த கட்டுரையில்
Show comments