Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர், ஹரியானாவில் இந்தியா கூட்டணி ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்..!

Siva
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (07:53 IST)
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்து முடிந்து உள்ள நிலையில், நேற்றுடன் ஹரியானா மாநில தேர்தல் முடிவடைந்ததால் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹரியானா மாநிலத்தில் நடந்த 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது என்றும், இங்கு பாஜக படுதோல்வி அடையும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஹரியானாவில் காங்கிரஸ் 40 முதல் 50 இடங்களை பிடிக்கும் என்றும், பாஜக 19 முதல் 30 இடங்களை பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments