Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (17:19 IST)
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து, மத்தியர அரசு கொரோனா கால ஊரடங்கை அறிவித்தது. ஏழு மாதங்களை கடந்த நிலையில் ஓரளவு தொற்றும் கொரோனா இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
 
சமீபத்தில் மத்திய அரசு கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்குவதாக அறிவித்த நிலையில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்க முடிவு செய்து மருத்துவர்கள் , செவிலியர்கள் உட்பட மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 
 
தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டது. அதில் இருவர் இறந்துவிட்டனர். இதனால் மக்கள் பலரும் தடுப்பூசி போடவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில் தற்ப்போது கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தயாரிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனவும் விளக்கம் கொடுத்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments