Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 வயது சிறுவனை கடித்துக் கொன்ற தெரு நாய்கள்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (13:38 IST)
ஆந்திராவில் 9 வயது சிறுவனை தெரு நாய்க்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தெரு நாய்க்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி கிராமத்தில் ஜஸ்வானந்த் என்ற 9 வயது சிறுவன் சாலையில் நடந்து சென்றுள்ளான். அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்க்கள் சிறுவனை பார்த்து குறைத்துள்ளன. இதனால் பயந்துபோன சிறுவன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சித்துள்ளான்.
 
இதனையடுத்து அந்த சிறுவனை வளைத்த தெரு நாய்கள், சரமாரியாக கடித்து குதறியுள்ளன. அங்கிருந்தவர்கள் நாயிடமிருந்து சிறுவனை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் சிறுவனின் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments