Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திராவில் மர்ம மரணமடைந்த 5 தமிழர்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி; தமிழக அரசு

ஆந்திராவில் மர்ம மரணமடைந்த 5 தமிழர்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி; தமிழக அரசு
, செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (09:38 IST)
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன், ஜெயராஜ், கருப்பண்ணன், சின்னப்பையன், முருகன் ஆகியோர் ஆந்திராவுக்கு வேலைக்கு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் ஐவரும் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா ஏரியில் சடலமாக மிதந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இவர்களின் உடல்களை மீட்டனர்.
 
இந்நிலையில் வழக்கறிஞர் சிவா என்பவர் இவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், 5 அடி ஆழமே இருக்கும் ஏரியில் இவர்கள் இறக்க வாய்ப்பிலை என கூறியிருக்கிறார். இவர்களை வேலைக்கு அழைத்து சென்றவர்கள் அல்லது போலீஸார் தான் ஐவரையும் கொன்றிருக்க வாய்ப்பிருப்பதாக கூறினார். இவர்கள் சாவில் மர்ம இருப்பதால் உரிய நீதி விசாரணை வேண்டும் என மனு அளித்திருக்கிறார்.
 
இந்நிலையில் ஆந்திராவில் மர்ம மரணமடைந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 3 லட்சம் நிதியிதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
தமிழர்கள் ஆந்திராவில் மர்ம மரணமடைவது வாடிக்கையாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் 20 தமிழர்களை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்காதலால் உருவாகிய கருவை கலைக்க முயற்சித்த பெண் பரிதாப பலி