Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி செய்தியை பரப்பி பரபரப்பாக்கிய சசி தரூர் !

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:10 IST)
லோக் சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என போலி செய்தி பரவியதால் பரபரப்பு. 

 
லோக் சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டார். சுமித்ரா மகாஜன் மறைவு காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆனால், இது போலியான தகவல் என தெரியவந்துள்ளது. சுமித்ரா மகாஜனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், அவர் மருத்துவரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை பின்பற்றி கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
பின்னர் தனது பழைய பதிவை நீக்கிவிட்டு, சுமித்ரா மகாஜன் இன்னும் நிறைய ஆயுலுடன் இருக்க வேண்டும் என சசி தரூர் கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments