ரகசிய அறை அமைத்து லாரியில் கட்டு கட்டாக பணம்.! ரூ.8 கோடி பறிமுதல்..! மிரண்டு போன போலீசார்..!

Senthil Velan
வியாழன், 9 மே 2024 (12:47 IST)
ஆந்திராவில் பைப் ஏற்றி வந்த லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி ரூ.8 கோடி பணத்தை பதுக்கி எடுத்து வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குபதிவு நடைபெற்ற முடிவடைந்த நிலையில், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது. ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து மக்களவை தேர்தலும் நடக்க இருக்கிறது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படையினரும், போலீசாரும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிக்காபாடு சோதனைச்சாவடியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைப்களை ஏற்றிவந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி அதில் ரூ.8 கோடி பணம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரியுடன் பணத்தை பறிமுதல் செய்த போலீசார்,  பணத்தை லாரியில் எடுத்து வந்த 2 பேரை கைது செய்தனர்.

ALSO READ: சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரிய வழக்கு.! சிறைத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

இந்த பணம் ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments