Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்ஜான் கொண்டாட்டத்தில் மோதல்; இணைய சேவை துண்டிப்பு! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (10:32 IST)
ராஜஸ்தானில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட்டில் ரம்ஜானை கொண்டாடுவதற்காக இஸ்லாமிய கொடியை ஏற்ற சிலர் முயற்சித்துள்ளனர். ஆனால் இந்து கொடியை அகற்ற முயல்வதாக அவர்களது செயலுக்கு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் ஒலிப்பெருக்கி அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். திடீரென இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் “ஜோத்பூர் ஜலோரி கேட்டில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. எந்த விலை கொடுத்தும் அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments