Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை காப்பாற்ற அதிமுகவினர் சதி: ராகுல் காரசார விளாசல்

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (18:43 IST)
புத்தாண்டுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எப்போது வாய்ப்புக்கிடைக்கும் என காத்திருந்தது போல இன்று காரசாரமாக மோடியையும் அதிமுகவையும் விளாசி தள்ளினார். 

 
ராகுல் கூறிய சில விமர்சங்கள் பின்வருமாறு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல தைரியம் இல்லாமல் பிரதமர் மோடி அவைக்கு வராமல் தனது அறைக்குள் பதுங்கி கொண்டுள்ளார். 
 
தனது நண்பர் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே ரபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடி நுழைத்து விட்டார். மேலும், காவிரி பிரச்சனையை மையமாக வைத்து அவையில் அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் ரபேல் விவகாரத்தில் இருந்து மோடியை காப்பாற்றி வருகின்றனர் என நேரடியாக விமர்சித்தார். 
 
அதோடு, ரபேல் கொள்முதல் விவகாரம் தொடர்பான பல முக்கிய கோப்புகள் இன்னும் தனது வீட்டில் இருப்பதாக முன்னாள் ராணுவ மந்திரியும், தற்போதைய கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அதை அவையில் போட்டுக்காட்ட அனுமதியும் கோரினார் ஆனால் அதர்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments