Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக, திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்: காரணம் என்ன தெரியுமா?

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (18:42 IST)
மக்களவையில் சபாநாயகர் உத்தரவை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதாக அதிமுகவை சேர்ந்த 24 எம்.பி.க்கள் 5 அமர்வுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். அதேபோல் மாநிலங்களவையிலும் தொடர் அமளியில் ஈடுபட்டதாக அதிமுக, திமுக எம்பிக்கள் அனைவரும் இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் இன்று காலை பாராளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பிக்களை அமைதி காக்குமாறு மக்களவையில் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவையில் வெங்கய்யா நாயுடு அவர்களும் பலமுறை கேட்டுக்கொண்டும் அவர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

அதேபோல் மாநிலங்களவையில் திமுக எம்பிக்களும், இதே பிரச்சனைக்காக அமளி செய்தனர். இதனையடுத்து திமுக, அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments