Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அரசை எதிர்த்து 14 எதிர்கட்சிகள் பேரணி! – டெல்லியில் பரபரப்பு!

Advertiesment
National
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
நாடாளுமன்றம் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே முடிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் 14 எதிர்கட்சிகள் இணைந்து பேரணி நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்து ஆலோசிக்க கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது நிர்ணயித்த காலத்திற்கு முன்பே கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் திமுக உள்ளிட்ட 14 எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் இன்று டெல்லியில் பேரணி நடத்தினர்.

இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி “நாட்டு மக்களின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்குகிறது.. பெகாசஸ் பிரச்சனையை விவாதிக்க கோரினோம்.. ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக் வீராங்கனையை நேரில் சென்று வரவேற்ற முதலமைச்சர்!