Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்கூட்டியே முடிக்கப்படுகிறதா நாடாளுமன்ற கூட்டதொடர்?

முன்கூட்டியே முடிக்கப்படுகிறதா நாடாளுமன்ற கூட்டதொடர்?
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (08:30 IST)
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தற்போது நடைபெற்று வரும் மழை கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பல நாட்கள் பாராளுமன்றம் நடைபெற விடாமல் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை குறித்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் முன்கூட்டியே கூட்டத்தொடரை முடக்கிய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்கள் இன்றி நடந்த தேரோட்டம்!