Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் மோடியை எச்சரித்தேன்: ரகுராம் ராஜன் அதிரடி!!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (11:44 IST)
பணமதிப்பிழப்பு நடிவடிக்கைகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இவை அனைத்தும் மோடி அரசின் சுய முடிவு எனவும் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதாக அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 
 
இதன்பின்னர் நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியது. பணப்புழக்கம் சீராக பல மாதங்கள் ஆனது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரிசர்வ் வங்கியிடம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு விவாதிக்கவில்லை. 
 
இந்த நடவடிக்கை மீதான குறிப்பு ஒன்றை தயாரித்து அளிக்க சொன்னார்கள். பணமதிப்பழிப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்காது. இது குறித்து ரிசர்வ் வங்கி மோடியை எச்சரித்தது. ஆனால், இவை அனைத்தையும் மீறி இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments