Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியா? சுனிதா கெஜ்ரிவால் தலைமையில் அவசர ஆலோசனை!

Siva
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:33 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய விட்டால் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக கூறிவரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கெஜ்ரிவால் இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பு இல்லை என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கெஜ்ரிவால் இல்லத்தில் சுனிதா கெஜ்ரிவால் உடன் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை செய்து வருவதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய அவரது மனைவி சுனிதா முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது

டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments