Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணியில் கிடந்த பூரான்.! ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.!!!

Senthil Velan
சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:24 IST)
கேரளாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் காவல்துறை எஸ்.ஐ வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் காவல்துறை எஸ்.ஐ  அஜித்குமார் பிரியாணி வாங்கி பாதியளவு சாப்பிட்டு விட்டார். அப்போது அதில் பூரான் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது  அலட்சியமாக பதில் அளித்தனர். பிரியாணியில் பூரான் கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் எஸ்.ஐ அஜித்குமார் புகார் செய்தார். அதன் பேரில் ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை கண்டுபிடித்தனர்.

ALSO READ: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை.! காங்கிரஸ் தான் காரணம்.! மத்திய அரசு தகவல்.!!

இதை அடுத்து அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் அசைவ பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை கொடுப்போம்! - ஹிஸ்புல்லா தலைவர் சபதம்!

2 சிறுவர்கள் கொடூர கொலை.. நரபலி கொடுக்க முயற்சியா? - குடியாத்தம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: மும்முனை போட்டியில் வெற்றி பெறுவது யார்?

பராமரிப்பு பணி எதிரொலி: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments