Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 97 ஆண்டுகள் சிறைத் தண்டனை- நீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (13:52 IST)
நமது அண்டை மாநிலம் கேரளம். அங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
 

கேரளாவில்  தன் உறவுக்கார பள்ளி சிறுமி ஒருவரை 9 ஆண்டுகளாக( 6 வயது முதல் 13 வயது வரை) பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை( தாய்மாமன், 41 வயது)  போக்சோ வழக்கில் கைது செய்த  போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வழக்கு காசர்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த  வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை 9 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபருக்கு 97 வருட சிறைத்தண்டனையுடன், ரூ.8 லட்சம் அபாரமும் விதித்து காசர்கோடு மாவட்ட நீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும்,  இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 8.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்