Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்றத்தில் எதை பற்றியும் விவாதிக்க தயார்! – பிரதமர் மோடி உறுதி

Advertiesment
National
, திங்கள், 31 ஜனவரி 2022 (11:06 IST)
இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எது குறித்தும் விவாதிக்க தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலுக்காக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. நாளை பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் இன்று கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னதாக பேசிய பிரதமர் மோடி “இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் உலக அளவில் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இருக்கும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்த வித ஒளிவு மறைவுமின்றி அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க தயார்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது அமைதியை குலைக்கும் பதிவு!? – மற்றொரு பாஜக பெண் நிர்வாகி மீது வழக்கு!