Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நாவில் ஒளிபரப்பாகும் 100வது மன் கீ பாத் நிகழ்ச்சி! – என்ன பேசப்போகிறார் பிரதமர்?

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (07:43 IST)
மாதம்தோறும் வானொலி வழியாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி வரும் “மன் கீ பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சியின் 100வது ஒளிபரப்பு இன்று நடக்க உள்ளது.

கடந்த 2016ல் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றது முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் மக்களிடம் வானொலி வழியாக “மன் கீ பாத் (மனதின் குரல்)” நிகழ்ச்சி மூலம் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசி வரும் பிரதமர் மோடி, மாணவர்களிடம் தொலைபேசி வழியாக உரையாடுதல், வித்தியாசமான போற்றத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளும் மக்களை பாராட்டுதல் ஆகிய பலவற்றை செய்துள்ளார்.

இன்று பிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சி 100வது நேரலை ஒளிபரப்பாக உள்ளது. இந்த 100வது மன் கீ பாத் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக பிரதமர் பேசுவது ஐ.நா தலைமை செயலகத்திலும் ஒலிபரப்பப்பட உள்ளது. இந்திய நேரப்படி காலை 11 – 11.30 மணி வரை ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஐ.நா சபையில் அமெரிக்க நேரப்படி 1.30க்கு ஒலிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி அகில இந்திய வானொலியால் 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாவதும் குறிப்பிடத்தக்கது.

இன்று 100வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments