Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாதத்தில் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (07:40 IST)
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருவதால் கோடையின் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் மே மாதத்தில் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. 
 
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நாட்டின் கிழக்கு பகுதிகளில் மே மாதத்தில் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என்றும் வடவேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் இரவில் அதிக வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
பகல் நேரத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருந்தாலும் இரவில் மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் ஹரியானா பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான அளவு மழை பொழிவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கர்நாடகா ஆந்திரா கேரளா ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments