Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.102ஐ கடந்தது பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (15:41 IST)
தமிழகம் உள்பட 5 மாநில பொதுத் தேர்தல் நடந்து கொண்டு கொண்டிருந்தபோது பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது மாறாக பெட்ரோல் விலை குறைந்தது என்பதையும் பார்த்தோம் 
 
ஆனால் தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் உயர்ந்து கொண்டிருந்த நிலையிலும் நான்காவது நாளாக இன்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது
 
குறிப்பாக ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பெட்ரோல் ரூபாய் 100ஐ கடந்து உள்ளது என்பதும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்காநகர் என்ற மாவட்டத்தில் 102 ரூபாய்க்கும் அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல். மத்தியப்பிரதேசம், அனுப்பூரில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.86 ஆகவும், மகாராஷ்டிராவில் பர்பானியில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.95 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. 
 
இந்த ஆண்டில் 2-வது முறையாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100க்கு அதிகமாக செல்கிறது. இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments