Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் ஓட்டு போட எதிர்ப்பு! ராணுவ பாதுகாப்புடன் வந்த அமைச்சர் – உ.பியில் பரபரப்பு!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (12:55 IST)
உத்தர பிரதேசத்தில் 4வது கட்ட தேர்தலில் வாக்களிக்க வந்த மத்திய இணை அமைச்சருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் இன்று 4ம் கட்ட தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் லக்கிம்பூர் மாவட்டம் பன்பீர்பூரில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வந்துள்ளார்.

ஆனால் அவரது வருகையை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் 200க்கும் அதிகமான துணை ராணுவ படையினர் பாதுகாப்போடு வாக்குச்சாவடி சென்று தனது வாக்கை செலுத்தியுள்ளார் அஜய் மிஸ்ரா.

முன்னதாக லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகளை காரை ஏற்றி கொன்ற வழக்கில் அஜய் மிஸ்ரா மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments