Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் யார்? திமுகவின் அடுத்த நகர்வு!

21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் யார்? திமுகவின் அடுத்த நகர்வு!
, புதன், 23 பிப்ரவரி 2022 (11:00 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற திமுக தலைமை பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. 

 
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றி இருப்பது வரலாறு காணாத வெற்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சிக்கு பெற்று தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
திமுகவின் அமோக வெற்றியை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் சென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதயநிதி, ஆ ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 
 
இந்நிலையில் வெற்றி களிப்பில் திமுகவினர் இருக்கும் நிலையில் 21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. 134 நகராட்சி தலைவர், துணை தலைவர், 435 பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரையும் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
 
இப்பணிகள் முடிந்ததும் தலைமை பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி செய்து அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் தெருக் குழந்தைகள் அதிகரிப்பு! – குழந்தைகள் உரிமைகள் ஆணையம்!