Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைவாசத்திலிருந்து விடுதலையாகிறார் ப.சிதம்பரம்..

Arun Prasath
புதன், 4 டிசம்பர் 2019 (10:56 IST)
ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயாலும் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பிறகு பல முறை அவர் ஜாமீன் மனு தாக்கல் செயதார். ஆனால் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதனிடையே சமீபத்தில் சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்பு அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற மனுத் தாக்கல் செய்திருந்தார் ப.சிதம்பரம். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 106 நாட்கள் சிறைவாசத்திலிருந்து தற்போது விடுதலையாகியுள்ளார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரத்திற்கு அனுமதியின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளக்கூடாது எனவும், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments