Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் கனமழை - டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:42 IST)
டெல்லியில் 3வது நாளாக தொடரும் கனமழை 4 ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் வீடுகள் மற்றும் கடைகளில் வெள்ள நீர் புகுந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் டெல்லியில் 3வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் 4 ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியதுடன் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. 
 
டெல்லியில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்துள்ளதாக மழை பதிவு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் 112.1 மிமீ மழை பெய்திருப்பதாகவும், இதற்கு முன்பு 2002ல் செப்டம்பர் 13 ஆம் தேதி 126.8 மி.மீ மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments