Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் வரலாறு காணாத மழை: ஆரஞ்ச் அலர்ட் விடுத்ததால் பரபரப்பு!

டெல்லியில் வரலாறு காணாத மழை: ஆரஞ்ச் அலர்ட் விடுத்ததால் பரபரப்பு!
, புதன், 1 செப்டம்பர் 2021 (18:50 IST)
டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதை அடுத்து அம்மாநில வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் வீடுகள் மற்றும் கடைகளில் வெள்ள நீர் புகுந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டெல்லியில் இன்று வரலாறு காணாத மழை பெய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்துள்ளதாக மழை பதிவு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இதனை அடுத்து வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு டெல்லியில் கனமழை பெய்யும் என்று தகவல் வெளிவந்துள்ளது அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாக்கை வெட்டிகொண்ட தொழிலாளி!