Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாத வாடகையை மட்டுமே இனி முன்பணமாக வாங்க வேண்டும்.. மத்திய அரசின் புதிய சட்ட திட்டம்

Arun Prasath
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (18:04 IST)
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டத்தில், இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், வாடகை வீட்டிற்கு இனி இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும் என்று, மத்திய அரசு, மாதிரி வீட்டு வசதி சட்ட வரைவை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. மேலும் அந்த வரைவு சட்டத்தில், வாடகையை உயர்த்த வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே போல், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வாடகைத்தாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், அபராதம் விதிக்கவும், ஒவ்வொறு மாதத்திற்கும் இரு மடங்கு வாடகையை உரிமையாளர்கள் வசூலிக்கவும் அந்த சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு வாடகைத் தாரர்களின் உரிமைகளுக்கு இணையாக நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த சட்ட திட்டம் உருவாக்கியிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments