Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகலாந்து முதலமைச்சராக 5 வது முறையாக நெய்பியு ரியோ பதவியேற்பு

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (15:15 IST)
நாகலந்து மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில், என்.டி.பி.பி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நெய்பிபு ரியோ 5 -வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

நாகலாந்து  மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. 60 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இத்தேர்தலில், பாஜக 12 இடங்களிலும், கூட்டணி கட்சியான என்.டி.பி.பி கட்சி 25 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதன்படி, கூட்டணி கட்சிகளின் சார்பில், என்.டி.பி.பி கட்சியைச் சேர்ந்த நெய்பியு ரியோ  5 வது முறையாக முதல்வராகப் பதவியேற்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று நாகலாந்தில் உள்ள  கோஹிமா நகரில் இன்று முதல்வர் பதவியேற்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், ரியோ முதல்வராகப் பதவியேற்று, ரகசியக் காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மா நில கவர்னர் இல. கணேஅஸ்ன், பாஜக தேசிய தலைவர் ஜேபி, நட்டா அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments