Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பப்ஜி விளையாட்டால் ரூ.10 லட்சம் இழப்பு! – வீட்டை விட்டு சிறுவன் ஓட்டம்!

பப்ஜி விளையாட்டால் ரூ.10 லட்சம் இழப்பு! – வீட்டை விட்டு சிறுவன் ஓட்டம்!
, ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (09:30 IST)
மும்பையில் பப்ஜி விளையாட்டால் பணத்தை இழந்த சிறுவன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது பப்ஜி இந்தியா என்ற பெயரில் இந்தியாவுக்கென பிரத்யேகமாக மீண்டும் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பல சிறுவர்கள், இளைஞர்கள் தீவிரமாக பப்ஜியில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் மும்பை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளான். அதில் சில அடையாள அட்டை, பிரத்யேக கேட்ஜெட்ஸ் வாங்குவது என தன் தயாரின் கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்தை இழந்துள்ளான்.

இதுகுறித்து பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடிய சிறுவனை போலீஸார் கண்டறிந்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து சீன எல்லைக்கும் புகும் அமெரிக்க கப்பல்கள்! – எச்சரிக்கும் சீனா!