Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவீதியென்றும் பார்க்காமல் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது? – வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (18:37 IST)
மும்பையை சேர்ந்த பெண் கலைஞரான துர்கா கவுடேவை நடுரோட்டில் வைத்து ஒரு மனிதர் அடித்து,உதைத்து, கழுத்தை நெறிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

துர்கா கவுடே பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஓவியர். கோவாவின் வடக்கு பகுதியில் தற்போது வசித்து வரும் இவர் கடந்த 31ம் தேதியன்று சாலிகோ கிராம பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக போன் பேசிக்கொண்டே வந்த நபர் இவரது வண்டியில் மோதியிருக்கிறார். சுதாரித்த துர்கா வந்த கோபத்தில் இடித்து சென்றவரை திட்டியிருக்கிறார்.

உடனே துர்காவின் வண்டியின் முன்னால் தனது வண்டியை மறைத்து நிறுத்திவிட்டு வந்த அந்த நபர் துர்காவை ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் சராமாரியாக அடித்திருக்கிறார். கழுத்தை நெறித்து கொல்ல முயன்றிருக்கிறார். உடனே அங்கே சூழ்ந்திருந்தவர்கள் அவரை பிடித்து இழுத்து துர்காவை காப்பாற்றிடிருக்கிறார்கள். உடனடியாக இது குறித்து போலீஸில் புகார் அளித்தார் துர்கா.

போலீஸ் விசாரணையில் தாக்கியவரின் பெயர் ப்ரையன் ஃப்ராங்கோ என தெரிய வந்திருக்கிறது. போலீஸ் கைது செய்த இரண்டு நாட்களில் ஃப்ராங்கோ பெயிலில் வெளியே வந்துவிட்டார். இதுகுறித்து போலீஸிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதிலை தரவில்லை. ஆதனால் மக்களிடமே நீதி கேட்கலாம் என முடிவு செய்தார் துர்கா. தனது யூட்யூப் பக்கத்தில் ஃப்ராங்கோ தன்னை தாக்கிய வீடியோவை பதிவிட்ட அவர் ‘இப்போது ஃப்ராங்கோ வெளியே ஜாலியாக சுற்றிவருகிறார். இதை பார்க்கும் நீங்கள் இதை ஷேர் செய்து எனக்கான நீதியை பெற்றுதாருங்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

துர்கா தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments