டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

Mahendran
வியாழன், 30 அக்டோபர் 2025 (16:49 IST)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாளந்தாவில் பேசிய ராகுல், "இந்தியா-பாகிஸ்தான் மோதலை தான் நிறுத்தியதாக ட்ரம்ப் பலமுறை பகிரங்கமாக கூறுகிறார். ஆனால், அதை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை" என்று சாடினார்.
 
அவர் மேலும் கூறியதாவது: பிகார் தற்போது வினாத்தாள் கசிவுகள் மற்றும் மோசமான சுகாதார கட்டமைப்புக்கு ஒத்த மாநிலமாக மாறிவிட்டது.
 
மாநில அரசு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலங்களை வழங்கியுள்ளது என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 'பிகாரில் நிலம் இல்லை' என்ற கூற்று தவறானது என்றும் அவர் விமர்சித்தார்.
 
கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்குத்திருட்டு மூலம் ஆட்சியை அமைத்தது. மேலும், டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை அழிக்க பிரதமர் மோடியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தீவிரமாக உள்ளன.
 
பிகாரில் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அரசாக இருக்கும். மேலும், நாளந்தாவில் உலகின் சிறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments