Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படேல் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் வல்லரசாகிருப்போம்.. மத்திய அமைச்சர் கருத்து

Arun Prasath
சனி, 2 நவம்பர் 2019 (14:33 IST)
வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா வல்லரசாக ஆகிருக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 144 ஆவது பிறந்தநாளை ஒட்டி, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் “ஒற்றுமை தின ஓட்டம்” நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.

அப்போது நிரூபர்களுக்கு பேட்டியளித்த அவர், ”படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாக இந்தியா ஆகிருக்கும். பிரதமர் மோடி காந்த 2014 ஆம் ஆண்டில் படேல் பிறந்ததினத்தை ஒற்றுமை தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து ஆண்டுதோரும் படேலின் பிறந்தநாள் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது” என கூறியுள்ளார்.

மேலும் “படேல் 560 மாநிலங்களை இந்தியாவாக இணைத்தவர்” என கூறி புகழ்ந்தார். முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சக்திவாய்ந்த இந்தியாவிற்கான படேலின் பங்களிப்பை குறித்து பேசியுள்ள நிலையில், தற்போது தர்மேந்திர பிரதான் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா வல்லரசாகிருக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments