Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேனகா காந்தி, வருண்காந்தி திடீர் நீக்கம்: பாஜக அதிரடி!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (17:08 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் சமீபத்தில் விவசாயிகள் பேரணி மீது மத்திய அமைச்சர் மகன் ஒருவரின் கார் மோதியதால் 4 விவசாயிகள் பரிதாபமாக பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண தொகை வழங்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதி இருந்தார்
 
அதுமட்டுமின்றி லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வருண்காந்தி பதிவு செய்திருந்தார் என்பதும், அது சம்பந்தமான வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பாஜக நிர்வாக குழு உறுப்பினர்கள் 80 பேர் பட்டியல் சற்று முன் வெளியாகிய நிலையில் அதில் ஏற்கனவே நிர்வாக குழு உறுப்பினராக இருந்த மேனகா காந்தி மற்றும் வருண் காந்தி ஆகிய இருவரும் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments