Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்
, வியாழன், 7 அக்டோபர் 2021 (16:31 IST)
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹெச் ராஜா அவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மீது அவதூறு வழக்கு ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 20ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசியதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் விசாரணை நடந்தபோது ஹெச் ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்எல்ஏவாக பதவியேற்றார் முதல்வர் மம்தா