Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசாயன ஆலையில் சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி – மகாராஷ்டிராவில் சோகம்

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (18:21 IST)
மகாராஷ்டிராவில் உள்ள ரசாயன ஆலையில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 12 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. 100 பேருக்கும் மேல் பணியாற்றி வந்த அந்த ஆலையில் நண்பகல் வேளையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இரசாயன ஆலை என்பதால் வேகமாக தீ அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது. விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 58 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திடீர் தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

கருணாநிதி நினைவு நாணயத்தில் ₹.. தூக்கி எறிந்துவிடுமா திமுக? அன்புமணி கேள்வி..!

பட்ஜெட் தாக்கலின்போது அமளி: அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments