Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டு திட்டங்களை நாங்களும் பண்ண ஐடியா!? – மராட்டிய அமைச்சர் புகழாரம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:10 IST)
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ திட்டங்கள் குறித்து மராட்டிய அமைச்சர் பாராட்டி பேசியுள்ளார்.

தமிழகத்தில் தூர கிராமங்களில் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்க்கும் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த சேவையை மேலும் பல இடங்களிலும் விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக திட்டங்கள் குறித்து பேசியுள்ள மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அங்குஷ்ராவ் “தமிழ்நாட்டின் மருத்துவத்துறை செயல்பாடுகள் வெகுவாக கவர்ந்துள்ளன. முத்துலெட்சுமி ரெட்டி தாய் சேய் நலத்திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் பாராட்டத்தக்கது. இதை மகாராஷ்டிராவும் பின்பற்றும் எண்ணம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments