Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு! – இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு! – இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!
, செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:50 IST)
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் கடந்த 1ம் தேதி முதலாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

130 குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு! – மேற்கு வங்கத்தில் பரபரப்பு