Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் பணி

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (12:50 IST)
கேரளாவில் அரிசி திருடியதாக அடித்த கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளது.
 
கடந்த பிப்ரவரி மாதம் கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதி பொதுமக்கள் அரிசி திருடியதாக கூறி மது என்ற ஆதிவாசி நபரை அடித்து கொன்றனர்.
 
ஆனால் அரிசி திருடியதாக அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என்று தெரிய வந்ததால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அவர் அடித்து கொல்லப்படுவது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் பார்த்த மக்கள், மதுவை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர். மேலும், கேரள முதல்வர் பினராஜி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
 
இந்நிலையில், அவரது தங்கை சந்திரிக்கா போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவருக்கு முதல்நிலை பெண் காவலர் பணி கிடைக்கவுள்ளது. அவரது அண்ணன் இறந்த அன்று இவர் போலீஸ் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments