வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு! ராகுல்காந்தி வேண்டுகோள்!

Prasanth Karthick
புதன், 19 மார்ச் 2025 (08:27 IST)

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து ராகுல்காந்தி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

 

இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் வெவ்வேறு தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டினர். இதன் மூலம் போலி வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகவும், பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை கண்டறிவதற்காக, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ள ராகுல்காந்தி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஏழைகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை எக்காரணம் கொண்டும் பறிபோகாத வண்ணம் கவனமாக செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments