Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு அணை விவகாரம்.. யூடியூபர்களுக்கு கேரள அமைச்சர் எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (18:12 IST)
முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகவல்களை ஊடகங்கள் மற்றும் யூடியூபர்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் முல்லை பெரியாறு அணை குறித்தும் அந்த அணையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் ஊடகங்கள் மற்றும் யூட்யூபில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் இவ்வாறு தகவல்களை பகிர்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீர் பாசன துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு பொறுப்பை ஒப்படைத்து உள்ளது என்றும் எனவே முல்லைப் பெரியாறு அணை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் இது குறித்து யாரும் தவறான தகவல்களை, பொதுமக்கள் அச்சப்படும் வகையிலான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டு கொண்டு உள்ளார்

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments