Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் 14 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்: கர்நாடக அரசியலில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (12:26 IST)
கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 14 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு எடியூரப்பா முதல்வர் ஆகியிருக்கிறார். எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. இந்நிலையில் 14 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 3 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்திருப்பதால், மொத்தன் 17 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் 17 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை 207ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 106 உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். இந்த அதிரடி நடவடிக்கையால் எடியூரப்பா ஆட்சியமைப்பது கிட்டதட்ட முடிவாகிவிட்டது.

மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 4 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் அறிவித்திருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments