Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென முடங்கிய ஜியோ! பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (20:52 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது இலவச வாய்ஸ் கால் மற்றும் இலவச இண்டர்நெட் சேவை. தமிழகத்தில் உள்ள குக்கிராமங்களில் கூட தற்போது இண்டர்நெட் உபயோகம் அதிகம் உள்ளது என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் ஜியோ வழங்கும் இலவச சேவையினால்தான்.
 
ஆனால் அதே நேரம் திடீர் திடீரென ஜியோ சேவை முடங்குவதாகவும், சப்வே உள்ளிட்ட சில பகுதிகளில் சிக்னல் கிடைப்பதில்லை என்றும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக தமிழகம் முழுவதும் ஜியோ சிம் இயங்கவில்லை என்றும் இதனால் வாய்ஸ்கால், இண்டர்நெட் உள்பட அனைத்தும் முடங்கியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஜியோ சேவை முடங்கியுள்ளதாகவும் இன்று இரவு ஒன்பது மணிக்குள் சேவை மீண்டும் தொடரும் என்றும் கூறப்படுகிறது. ஏர்செல் திடீரென முடங்கியதால் அதன் வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவுக்கு மாறிய நிலையில் தற்போது ஜியோவும் முடங்கியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments