Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அருண் ஜெட்லி

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (20:36 IST)
நெருக்கடிநிலை பிரகடனம் கொண்டு வரப்பட்ட தினத்தின் 43ஆம் ஆண்டு அனுசரிகப்படும் நிலையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார்.

 
1975ஆம் ஆண்டு முன்பு இன்றையை தினத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடிநிலை பிரகடனம் கொண்டு வரப்பட்டது. 43ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்றும் அதன் தாக்கம் குறையவில்லை.
 
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூலில் இதுதொடர்பாக கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 
 
காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி, ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய முறையை பயன்படுத்தினார். இந்திரா காந்தி ஜனநாயகத்தை பேரரச ஜனநாயமாக மாற்ற நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய முடிவு செய்தார்.
 
எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையிடப்பார்கள். பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. இதேபோன்று நாஜி ஜெர்மனியிலும் நடந்தது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியலைமப்பை ரத்து செய்தார்கள். அவர்கள் ஜனநாயகத்தை சர்வாதிகரமாக மாற்றுவதற்கு குடியரசு அரசியலமைப்பை பயன்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அருண் ஜெட்லியின் இந்த ஒப்பீடு மிகவும் மோசமானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments