Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா.. ஆந்திர முதல்வராகிறார் சந்திரபாபு நாயுடு..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (15:42 IST)
ஆந்திர மாநிலத்தில்  பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திர சட்டசபை தேர்தலில் முடிவின்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக எட்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் ஒரு சில நாட்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்றும் அப்போது அகில இந்திய அளவில் உள்ள முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments