Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் வருகிறது அரசாங்க மதுக்கடை – ஜெகன்மோகன் அதிரடி நடவடிக்கை

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (11:13 IST)
தமிழ்நாட்டை போல ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசாங்கமே எடுத்து நடத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர சட்டசபை தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தார். அதில் முக்கியமான ஒன்று ஆந்திரா முழுவதும் பூரண மது விலக்கு. ஆனால் ஆந்திரா முழுவதும் மதுக்கடைகள் தனியார் வசம் உள்ளன. மொத்தமாக 4377 உரிமம் பெற்ற கடைகளும், உரிமை பெறாமல் சிலவும் உள்ளது. இதற்கென தனி குழு அமைத்து ஆய்வு செய்த ஜெகன் மோகன் மதுக்கடைகளை நேரடியாக அரசாங்கமே எடுத்து நடத்தலாம் என முடிவெடுத்துள்ளார்.

இதன்படி 4377 மதுக்கடைகளை 3500 கடைகளை மட்டும் அரசாங்கம் நடத்தவும், மீதமுள்ளவற்றை இழுத்து மூடவும் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதற்காக 10000 மதுக்கடை பணியாளர்களை பணியமர்த்தவும் உள்ளார். இதன் மூலம் மதுக்கடைகளை குறைப்பது மட்டுமல்லாமல் வருவாயை நேரடியாக அரசாங்கத்திற்கு கொண்டு வரலாம் என்பது ஜெகன் மோகனின் திட்டம். இந்த மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments